R.P.OM'Sஅகர வரிசையில் மூலிகை யோகம்
அ வரிசை - 1
அக்ரகாரம்
நுரையீரல் சம்பந்தமான நோய்களில் இருந்து தீர்வு
*அக்ரகாரம், திப்பிலி இரண்டையும் சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ளவும். அதில் இரண்டு கிராம் எடுத்து தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சம்பந்தமான நோய்களில் இருந்து தீர்வு கிடைக்கும்.
உண்ணாக்கு வளர்ச்சி
இரண்டு பணவெடை அக்கரகாரத்தைத் தட்டி வாயிலிட்டு அடக்கிச் சுரக்கும் உமிழ் நீரை சுவைத்து விழுங்க நாவின் அசதி, பல்வலி, உண்ணாக்கு வளர்ச்சி, தொண்டைக் கம்மல் தாகம் இவைகள் போம்.
ஒரு பலம் அக்கரகாரத்தை இடித்து ஒருபாண்டத்தில் போட்டு அரைப்படி சலம் விட்டு அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரித்து வீசம் படியாகச் சுண்டக் காச்சி வடிகட்டிக் கொஞ்சம் கொஞ்சமாக வாயில் விட்டு அடக்கிக் கொப்பளித்து உமிழ்ந்துவிடவும். இப்படி தினம் 2 - 3 முறை மூன்று நாட்கள் செய்ய வாயிலுண்டான விரணம், தொண்டைப் புண், பல் வலி, பல்லசைவு முதலியவைகள் போம்.
இதனைத் தனியாக இடித்தெடுத்து சூரணத்தையாவது அல்லது பற்பொடிக்காக கூறப்பட்ட இதர சரக்குகளுடன் கூட்டியாவது பற்றேயித்து வர பற்களைக் கெடுத்து வரும் புழுக்கள் சாகும், பற்சொத்தையும் நீங்கும்,
அக்கரகாரச் சூரணத்திற்கு சமனெடை சோற்றுப்புக் கூட்டிக் காடிவிட்டு அரைத்து உண்ணாற்கிற்றடவ அதன் சோர்வை நீங்கும். இதனை நாவிற்தடவ தடிப்பை மாற்றும். இதன் தனிச் சூரணத்தை மூக்கிலூத மூர்ச்சை தெளிவதுடன் பற்கிட்டலையும் திறக்கச்செய்யும்.
அருகம்புல்
*அருகம்புல் சாறு தினமும் குடித்து வருவதன் மூலம் வயிற்றில் புண் ஏற்படாமல் தடுக்கலாம்.
ஆகாச கருடன்
தோல் நோய்கள் [குஷ்டம்.]
மண்ணுளிப் பாம்பு மனிதனை நக்கி விட்டால் குஷ்டம் என்ற பெருவியாதி வெண்குட்டம் கருமேக இரணங்களை உண்டு பண்ணும். இந்தப் பாம்பின் விடம் நக்கியவுடன் உடலில் பாய்ந்து தன் குணத்தைக் காட்டாது. நாளாவட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உடலில் பரவி மேற்கண்ட வியாதிகளை உண்டு பண்ணும். இதற்கு முற்றிய ஆகச கருடன் கிழங்கின் மேல் தோலை சீவி எடுத்து விட்டு, கிழங்கை பொடியாக நறுக்கி வெய்யிலில் காயவைத்துச் சுக்கு போல காய்ந்த பின் உரிலில் போட்டு நன்றாக இடித்து மாச்சல்லடையில் சலித்து எடுத்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு தினசரி காலை மாலை 10 கிராம் தூளை எடுத்து வாயில் போட்டு, சிறிதளவு வெந்நீர் குடித்து விட வேண்டும். இந்த விதமாக நாற்பது நாட்கள் கொடுத்து வந்தால் மண்ணுளிப் பாம்பின் விடம் முறிந்து விடும். உடலில் தோன்றிய கோளாறு யாவும் மறையும்.
எகர வரிசை
எள் :
உடல் பருமன் குறைய
நீங்கள் உங்கள் உடல் பருமன் குறையவேண்டும் அதாவது
உடல் இளைக்கவேண்டும் என்றாலும் அல்லது மெலிந்த
உடல் பருக்கவேண்டும் என்றாலும் கீழ் கண்டமுறையில்
எள்ளைச்சாப்பிட்டால் நீங்கள் விரும்பிய பலனைப்பெறலாம்.
கலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காப்பி அல்லது
தேநீர் குடியாமல் 20 கிராம் கறுப்பு எள்ளை மென்று தின்று
தண்ணீர் குடிக்கவேண்டும். (3) மூன்று மணி நேரம் வேறு
எதுவும் சாப்பிடாமல் இருக்கவேண்டும். இப்படிச்சாப்பிட்
டால் ஒரு மாதத்தில் பலன் தெரியும்.
உடல் பருக்க
நீங்கள் உங்கள் உடல் பருமன் குறையவேண்டும் அதாவது
உடல் இளைக்கவேண்டும் என்றாலும் அல்லது மெலிந்த
உடல் பருக்கவேண்டும் என்றாலும் கீழ் கண்டமுறையில்
எள்ளைச்சாப்பிட்டால் நீங்கள் விரும்பிய பலனைப்பெறலாம்.
கலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காப்பி அல்லது
தேநீர் குடியாமல் 20 கிராம் கறுப்பு எள்ளை மென்று தின்று
தண்ணீர் குடிக்கவேண்டும். (3) மூன்று மணி நேரம் வேறு
எதுவும் சாப்பிடாமல் இருக்கவேண்டும். இப்படிச்சாப்பிட்
டால் ஒரு மாதத்தில் பலன் தெரியும்.
அ வரிசை - 1
அக்ரகாரம்
நுரையீரல் சம்பந்தமான நோய்களில் இருந்து தீர்வு
*அக்ரகாரம், திப்பிலி இரண்டையும் சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ளவும். அதில் இரண்டு கிராம் எடுத்து தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சம்பந்தமான நோய்களில் இருந்து தீர்வு கிடைக்கும்.
உண்ணாக்கு வளர்ச்சி
இரண்டு பணவெடை அக்கரகாரத்தைத் தட்டி வாயிலிட்டு அடக்கிச் சுரக்கும் உமிழ் நீரை சுவைத்து விழுங்க நாவின் அசதி, பல்வலி, உண்ணாக்கு வளர்ச்சி, தொண்டைக் கம்மல் தாகம் இவைகள் போம்.
ஒரு பலம் அக்கரகாரத்தை இடித்து ஒருபாண்டத்தில் போட்டு அரைப்படி சலம் விட்டு அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரித்து வீசம் படியாகச் சுண்டக் காச்சி வடிகட்டிக் கொஞ்சம் கொஞ்சமாக வாயில் விட்டு அடக்கிக் கொப்பளித்து உமிழ்ந்துவிடவும். இப்படி தினம் 2 - 3 முறை மூன்று நாட்கள் செய்ய வாயிலுண்டான விரணம், தொண்டைப் புண், பல் வலி, பல்லசைவு முதலியவைகள் போம்.
இதனைத் தனியாக இடித்தெடுத்து சூரணத்தையாவது அல்லது பற்பொடிக்காக கூறப்பட்ட இதர சரக்குகளுடன் கூட்டியாவது பற்றேயித்து வர பற்களைக் கெடுத்து வரும் புழுக்கள் சாகும், பற்சொத்தையும் நீங்கும்,
அக்கரகாரச் சூரணத்திற்கு சமனெடை சோற்றுப்புக் கூட்டிக் காடிவிட்டு அரைத்து உண்ணாற்கிற்றடவ அதன் சோர்வை நீங்கும். இதனை நாவிற்தடவ தடிப்பை மாற்றும். இதன் தனிச் சூரணத்தை மூக்கிலூத மூர்ச்சை தெளிவதுடன் பற்கிட்டலையும் திறக்கச்செய்யும்.
அருகம்புல்
*அருகம்புல் சாறு தினமும் குடித்து வருவதன் மூலம் வயிற்றில் புண் ஏற்படாமல் தடுக்கலாம்.
ஆகாச கருடன்
தோல் நோய்கள் [குஷ்டம்.]
மண்ணுளிப் பாம்பு மனிதனை நக்கி விட்டால் குஷ்டம் என்ற பெருவியாதி வெண்குட்டம் கருமேக இரணங்களை உண்டு பண்ணும். இந்தப் பாம்பின் விடம் நக்கியவுடன் உடலில் பாய்ந்து தன் குணத்தைக் காட்டாது. நாளாவட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உடலில் பரவி மேற்கண்ட வியாதிகளை உண்டு பண்ணும். இதற்கு முற்றிய ஆகச கருடன் கிழங்கின் மேல் தோலை சீவி எடுத்து விட்டு, கிழங்கை பொடியாக நறுக்கி வெய்யிலில் காயவைத்துச் சுக்கு போல காய்ந்த பின் உரிலில் போட்டு நன்றாக இடித்து மாச்சல்லடையில் சலித்து எடுத்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு தினசரி காலை மாலை 10 கிராம் தூளை எடுத்து வாயில் போட்டு, சிறிதளவு வெந்நீர் குடித்து விட வேண்டும். இந்த விதமாக நாற்பது நாட்கள் கொடுத்து வந்தால் மண்ணுளிப் பாம்பின் விடம் முறிந்து விடும். உடலில் தோன்றிய கோளாறு யாவும் மறையும்.
எகர வரிசை
எள் :
உடல் பருமன் குறைய
நீங்கள் உங்கள் உடல் பருமன் குறையவேண்டும் அதாவது
உடல் இளைக்கவேண்டும் என்றாலும் அல்லது மெலிந்த
உடல் பருக்கவேண்டும் என்றாலும் கீழ் கண்டமுறையில்
எள்ளைச்சாப்பிட்டால் நீங்கள் விரும்பிய பலனைப்பெறலாம்.
கலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காப்பி அல்லது
தேநீர் குடியாமல் 20 கிராம் கறுப்பு எள்ளை மென்று தின்று
தண்ணீர் குடிக்கவேண்டும். (3) மூன்று மணி நேரம் வேறு
எதுவும் சாப்பிடாமல் இருக்கவேண்டும். இப்படிச்சாப்பிட்
டால் ஒரு மாதத்தில் பலன் தெரியும்.
உடல் பருக்க
நீங்கள் உங்கள் உடல் பருமன் குறையவேண்டும் அதாவது
உடல் இளைக்கவேண்டும் என்றாலும் அல்லது மெலிந்த
உடல் பருக்கவேண்டும் என்றாலும் கீழ் கண்டமுறையில்
எள்ளைச்சாப்பிட்டால் நீங்கள் விரும்பிய பலனைப்பெறலாம்.
கலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காப்பி அல்லது
தேநீர் குடியாமல் 20 கிராம் கறுப்பு எள்ளை மென்று தின்று
தண்ணீர் குடிக்கவேண்டும். (3) மூன்று மணி நேரம் வேறு
எதுவும் சாப்பிடாமல் இருக்கவேண்டும். இப்படிச்சாப்பிட்
டால் ஒரு மாதத்தில் பலன் தெரியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக